மக்களை அலையவிடுபவர்களாக அதிகரிகள் செயற்படவே கூடாது – யாழ்ப்பாண மாவட்டச் செயலர் அறிவுரை!

Friday, April 21st, 2017

தமது பிரச்சினைகளுக்கு தீர்வைக் கேட்டு அலுவலர்களான எம்மை நாடி வரும் பாமர மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையிலேயே அதிகாரிகள் செயற்படவேண்டும். மாறாக அவர்களை அலைய விடுபவர்களாக அதிகாரிகள் செயற்படக்கூடாது என யாழ்ப்பாண மாவட்ட செயலர் நா.வேதநாயகம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமது அன்றாட சிறு விடயங்களுக்குத் தீர்வு வேண்டி அலுவலர்களான எம்மை நாடி வரும் பாமர மக்களின் பிரச்சினைகளை முடிந்த வரையில் தீர்த்து வைப்பவர்களாகவே அதிகாரிகளாகிய நாம் செயற்பட வேண்டும் மாறாக அவர்களை அலைய விடுபவர்களாக விளங்கக்கூடாது. இதில் சில அதிகாரிகள் தொடர்ந்தும் அலைய விடுபவர்களாகவே இருக்கின்றனர். அலுவலர்கள் தீர்த்து வைப்பார்கள் என்ற நம்பிக்கையிலேயே மக்கள் எம்மை நாடி வருகின்றனர் இதனால் அவர்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வை வழங்க வேண்டும். அவ்வாறு தீர்வு வழங்கமுடியாத பட்சத்தில் உரிய இடங்களில் தொடர்பு கொண்டு உரிய தீர்வையும் அதிகாரிகளே பெற்றுக்கொடுக்க வேண்டும். என்றார்.

Related posts: