போலியான கணக்குகள் உள்ளிட்ட தவறான தகவல்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க முகநூல் உட்பட சமூக ஊடக வலைத்தளங்கள் இணக்கம் !

போலியான கணக்குகள் உள்ளிட்ட தவறான தகவல்களுக்கு எதிராக புதிய நடவடிக்கைகளை எடுக்க முகநூல் உட்பட பல சமூக ஊடக வலைத்தளங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சமூக ஊடக வலையமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் மெட்டா, கூகுள், டுவிட்டர் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
இதன்படி, போலி கணக்குகள் உள்ளிட்ட தவறான தகவல்களுக்கு எதிராக அபராதம் விதிக்கும் முறை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் தவறான தகவல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
000
Related posts:
யாழ் மண்ணில் கால் பதித்தால் சொர்க்கம் நிச்சயம் - இந்தியத் துணைத் தூதுவர் ஆ.நடராஜன்!
விரைவில் மாகாண சபை தேர்தலை நடத்த சட்டமா அதிபரிடம் ஆலோசனை!
உக்ரைன் மற்றும் ரஷ்ய பிரதிநிதிகளுக்கு இடையில் இன்றும் உயர்மட்ட பேச்சு!
|
|