போதையில் வாகனம் செலுத்துவோரைக் கைது செய்ய விசேட நடவடிக்கை!

Monday, December 17th, 2018

நாடு முழுவதும் பண்டிகைக் காலங்களின் போது மது அருந்திவிட்டு வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் கொழும்பு நகரின் பாதுகாப்பு மற்றும் வாகனப் போக்குவரத்துக்களைக் கட்டுப்படுத்துவதற்காக 2000 பொலிஸார் சிவில் மற்றும் சீருடைகளுடன் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: