போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளின் தவறுகளுக்கான தண்ட பணத்தை கடன் அட்டை மூலம் செலுத்தும் முறை அறிமுகம் – பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, June 20th, 2021

எதிர்காலத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் மோட்டார் வாகன சாரதிகளின் தவறுகளுக்கான தண்ட பணத்தை கடன் அட்டை மூலம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் சம்பந்தப்பட்ட இடத்தில் கடமையில் இருக்கும் பொலிசாரினால் இந்த தண்டப்பணத்தை கடன் அட்டை மூலம் வசூலிப்பதற்கான தரவை பெற்றுக்கொள்வதற்கான முறை அறிமுகப்படுத்தப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் பொலிஸ் தலைமையகத்தில் இதுதொடர்பான இணையதள பணக் கொடுக்கல் வாங்கல் முறை உருவாக்கப்பட்டவுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் வாகனம் சார்ந்த தவறுகளுக்காக சாரதிகளுக்கு புள்ளி வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் குறித்த புள்ளி குறையும் போது சில மாதங்களுக்கு அல்லது பல வருடங்களுக்கு வாகன அனுமதிப் பத்திரம் இரத்து செய்யப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: