பொலிஸார் மீதான வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது!
Thursday, August 10th, 2017
கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸார் மீதான வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரை பயங்கரவாத தடைச்சட்டப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
;வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த சத்தியசாகீத்தியன் மற்றும் கொக்குவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த சண்முகராசா சானுஜன் ஆகியோரே நேற்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரையும் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் பயங்கரவாத தடைச்சட்டப் பிரிவினர் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த இருவரையும் யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அரசுக்கு எச்சரிக்கை!
விஜயகலாவுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி 22ஆம் திகதி!
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ஆ...
|
|
|


