பொது பாதுகாப்பு அமைச்சருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!
Friday, March 10th, 2023
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸூற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை அவர் ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு கோரப்பட்டுள்ளது.
கடந்த 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் இடம்பெற்ற போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் எவ்வாறு செயற்பட்டார்கள் என்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பிலேயே அமைச்சருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இது தொடர்பான போராட்டங்களை கட்டுப்படுத்த களப்பணியாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் பட்டியலை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு எழுத்துமூல அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மாதம் 35 லட்சம் வாடகை செலுத்தும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு!
ஒக்ரோபர் மாதத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை!
இலங்கையில் ஒமிக்ரான் வைரஸ் வேகமாகப் பரவாது - ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்தியர் சந்திம ஜீ...
|
|
|


