பொதுத் தேர்தல் தொடர்பாக இதுவரையில் 900 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு – கஃபே அமைப்பு தெரிவிப்பு!
Monday, August 3rd, 2020நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இதுவரையில் 900 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கஃபே அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இதுவரையில் 920 முறைப்பாடுகள் கஃபே அமைப்புக்கு பதிவாகியுள்ளதாகவும் அவற்றில் 142 முறைப்பாடுகள் தேர்தல் வன்முறைத் தொடர்பாக பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரையான காலப்பகுதிக்குள் வெறுப்பூட்டும் பிரசாரங்கள் மற்றும் பொய்யான பிரசாரங்களை மக்கள்மயப்படுத்துவது தொடர்பாகவே அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ஆலோசனை!
இன்று இலவச கல்வியின் தந்தைக்கு 133 ஆவது ஜனன தினம்!
வாக்னர் கூலிப்படையின் தலைவர் பிரிகோஷினின் மரணம் தாமதமாக நிகழ்ந்துள்ளது - எலோன் மஸ்க் தெரிவிப்பு!
|
|