பேஸ்புக் inbox கண்காணிக்கப்படுகிறது – மஹிந்த தேசப்பிரிய!

Friday, October 25th, 2019

முகப்புத்தகத்தை கட்டுப்படுத்துவதற்கோ அல்லது தடை செய்வதற்கோ நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலம் என்பதால் பல்வேறு வகையிலும் முகப்புத்தகம் ஊடாக பிரசாரங்களும்,குற்ற செயற்பாடுகளும் அதிகளவில் இடம்பெறுவதாக குற்றம் சுமத்தப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ,இலங்கையில், பேஸ்புக் பயன்படுத்துனர்களால் inbox ஊடாக பரிமாறப்படும் தகவல்களும் கண்காணிக்கப்பட்டு வருவதாக, பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: