பேக்கரி உற்பத்திகளது விலையை அதிகரிக்க நடவடிக்கை!

Monday, March 11th, 2019

அரசுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் அனைத்து பேக்கரி உற்பத்திகளதும் விலையினை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

இம்முறை பாதீட்டில் பேக்கரி தொழிலுக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்படவில்லை என குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகையால் இது தொடர்பில் அரசுடன் கலந்துரையாடி, எதிர்வரும் தீர்மானங்களை எட்டவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: