பெறுமதி மிக்க அரசியல் கலாச்சாரம் ஒன்றை உருவாக்குவதற்கு ஜனாதிபதி ஆலோசனை !

Monday, March 19th, 2018

பெறுமதி மிக்க அரசியல் கலாச்சாரம் ஒன்றை உருவாக்குவதற்கு மக்கள் பிரதிநிதிகள் தமது செயல்பாடுகளின் ஊடாக மக்களுக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெற்ற மக்கள் பிரதிநிதிகளை சந்திக்கும் நிகழ்வு கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சரியான நேர அட்டவணையின் அடிப்படையில் செயல்பட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகஇ தமது அதிக பங்களிப்பை வழங்கவும் மக்களுடன் சிக்கல்களை ஏற்படுத்திக் கொள்ளாமல் கொள்கை ரீதியாகவும் பொறுமையாகவும் செயல்பாடுவது அவசியம் என ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: