பெரும்போக நெல் அறுவடையின் போது, ஏற்பட்டுள்ள இழப்பீடு 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிப்பு – விவசாய அமைச்சு தெரிவிப்பு!
Sunday, March 3rd, 2024
பெரும்போக நெல் அறுவடையின் போது, ஏற்பட்டுள்ள இழப்பீடு 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
சில பகுதிகளில் அது 25 சதவீதமாக அதிகரித்துள்ளாதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, பெரும்போகத்தின் 3 லட்சத்து 50 ஆயிரம் மெற்றிக் டன் பயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெற்பயிர் நீண்டகாலமாக பயிரிடப்பட்டிருந்தாலும் அது எப்போது விளையும் என்ற புரிதல் இல்லாமையே இதற்கு பிரதான காரணமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பயிர்ச் சேதங்களால் ஏற்பட்டுள்ள இழப்பு பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதி என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சீரற்ற வானிலை: தொற்று நோய்கள் பரவும் அபாயம் - தொற்றுநோய் தடுப்பு விசேட வைத்திய அதிகாரிகள்!
தொடர்ந்தும் மழை பொழிந்தால் கடும் ஆபத்தை எதிர்கொள்ளும் தள்ளப்படும் நிலைக்கு – அவதானிகள் எச்சரிக்கை!
நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றை குறைக்க தீர்மானம் - மத்திய வங்கி...
|
|
|


