பெப்ரவரி மாத செலவுகளை ஈடுகட்ட தேர்தல் ஆணையம் 770 மில்லியன் கோருகிறது!
Sunday, February 5th, 2023நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பணிகளுக்காக 770 மில்லியன் ரூபாவை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
இது தொடர்பான கடிதம் நிதி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் செலவினங்களுக்காக முன்னர் நிதியமைச்சிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் பணம் விடுவிக்கப்பட்டதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து அத்தொகையை ஒதுக்குவதற்கு பாராளுமன்றம் அண்மையில் அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு!
5000 புசல் விதை நெல் விவசாயிகளிடம் கொள்வனவு - விதை உற்பத்திச் சங்கம் தீர்மானம்!
15 ஆயிரம் ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள தீர்மானம் – கல்வி அமைச்சு!
|
|