புளோரிடாவை கடுமையாக தாக்கி வரும் புயல்!

Monday, September 11th, 2017

இர்மா புயல் தாக்கியதில் அமெரிக்காவில் 3 பேர் பலியாகி உள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அட்லாண்டிக் கடலில் உருவான இர்மா புயல் கரீபியன் தீவுகளை கடுமையாக தாக்கியுள்ளதுடன், இதைத்தொடர்ந்து அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தையும் இன்று தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இர்மா புயல் தாக்கத்தால் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. புயல் தாக்கியதில் அமெரிக்காவில் 3 பேர் பலியாகினர்.

இந்த நிலையில், இர்மா புயல் பாதிப்பில் சிக்கியுள்ள அமெரிக்கர்களுக்காக சேவா இன்டர்நேஷனல் என்ற தன்னார்வ அமெரிக்க வாழ் இந்திய அமைப்பினர் சார்பில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்த அமைப்பு அட்லாண்டா மாகாணத்தில் ஏற்படுத்திய நிவாரண முகாம்களில் சுமார் 300 குடும்பத்தினர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.இதேபோல், மற்றொரு தன்னார்வ அமைப்பு ஏற்படுத்தியுள்ள நிவாரண முகாம்களில் சுமார் 2,000 குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மேலும், அட்லாண்டாவில் உள்ள 4 கோயில்களும் திறக்கப்பட்டு புயல் பாதிப்பில் சிக்கியுள்ள புளோரிடா மாகாண பொதுமக்கள் தங்கிக் கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டு வருகிறது.அட்லாண்டாவில் உள்ள இந்திய தூதரகம் சார்பிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புயல் பாதிப்பில் சிக்கியவர்களுக்கு உடனடி உதவியளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதேவேளை, இதுதொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறுகையில், புயல் பாதிப்பு குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related posts: