புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை செயலிழக்கச் செய்வதற்கு ஏற்படுத்தப்பட்ட தடைகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளது – இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவிப்பு!

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை செயலிழக்கச் செய்வதற்கு ஏற்படுத்தப்பட்ட தடைகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.
மின்சார உற்பத்தி மூலப்பொருட்களை சேகரிப்பது தொடர்பாக அதன் சப்ளையர்களுடன் சில முடிவுகள் எட்டப்பட்டுள்ளதால்,
எதிர்காலத்தில் மின் கட்டண குறைப்பு திட்டத்தை தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட மின்வலு மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
000
Related posts:
அம்பாறையில் பதற்றம்: முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல்!
ஆரியகுளம் சந்திப் பகுதியில் விபத்து - மினி வானுடன் மோதி மோட்டார் சைக்களில் சென்றவர் உயிரிழப்பு!
இலங்கை சுகாதாரத் துறைக்கு ஜப்பானிடமிருந்து 38 மில்லியன் டொலர்கள் மானியம் - அமைச்சர் பந்துல குணவர்தன ...
|
|