புதிய பிரமர் ரணிலுக்கு கிடைத்த முதல் வெற்றி – 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஜப்பான் அரசாங்கம் உறுதியளிப்பு!

Friday, May 13th, 2022

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் நேற்றையதினம் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவி ஏற்றுக்கொண்டதை அடுத்து  இலங்கையில் பல சாதக மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.

முதற்கட்டமாக பெரும் பின்னடைவை சந்தித்திருந்த பங்குச் சந்தை திடீரென அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதேவேளை இன்றையதினம் இலங்கை ரூபாவின் பெறுமதியிலும் சாதக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இலங்கையின் தலைவிதியை தீர்மானிக்கும் முக்கிய விடயமாக அந்நிய செலாவணி இருப்பை அதிகரிப்பதே முக்கிய விடயமாக உள்ளது. அதிலும் சாதகமான நிலையை ரணில் எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம் இதுவரை இடம்பெற்ற கலந்துரையாடலில் பல பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு கடனுதவியாக வழங்க பல நாடுகள் இணக்கம் வெளியிட்டுள்ளன. இதில் ஜப்பான் அரசாங்கம் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏற்றுமதி நிதியளிப்பு நிறுவனமான இந்தியா எக்சிம் வங்கி, நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு 1.3 பில்லியன் டொலர்களை கடனாக வழங்க திட்டமிட்டுள்ளது.

நாடு அதன் மோசமான வெளிநாட்டு நாணய நெருக்கடியை எதிர்கொள்கிறது. இலங்கைக்கு உடனடி கடன் மறுசீரமைப்பு அவசியமாக உள்ளதென எக்ஸிம் வங்கியின் நிர்வாக அதிகாரி ஹர்ஷா பங்கரி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இலங்கைக்கு 1.3 பில்லியன் டொலர்களை கடனாக வழங்க எதிர்பார்க்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை அடுத்த வாரமளவில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட ரணில் திட்டமிட்டுள்ளார்.

அமெரிக்காவுடன் நெருக்கிய உறவுகளை கொண்ட ரணிலுக்கு பெரும் தொகைநிதியை பெறுவது மிகவும் இலகுவான விடயம் என பொருளியல் நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

அதேவேளை ஐரோப்பிய நாடுகளுடனும் சுமூக உறவினை ரணில் தற்போதும் முன்னெடுத்து வருகிறார். அடுத்து வரும் நாட்களில் நோர்வே உட்பட பல ஐரோப்பிய நாடுகளும் பெருமளவு நிதியுதவியை இலங்கைக்கு வழங்க முன்வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


24 மணித்தியாலங்கள் தொடர்ச்சியான காய்ச்சல் காணப்படுமாயின் வைத்திய ஆலோசனையை நாடுங்கள் - தேசிய டெங்க...
2023 ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை – உரிய கால எல்லைக்குள் மாணவர்கள் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்கும...
கிறிக்கெற் சபைக்கான இடைக்கால குழு மற்றும் வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம...