புதிய தவணை ஆரம்பிக்கும் முன்னர் மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, January 10th, 2024

புதிய தவணை ஆரம்பிக்கும் முன்னர் மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (09) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதுவரையில் 80% அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: