புதிய அரசியல் அப்மைப்பு:  சுகாதார சேவைக்கு பேராபத்து!

Sunday, October 22nd, 2017

அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய அரசியல் அமைப்பு காரணமாக நாட்டின் தேசிய சுகாதார சேவைக்கு ஆபத்து இருப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

சம்மேளனத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே இதனை தெரிவித்துள்ளார்.செய்தியாளர்கள் மத்தியில் இந்தக்கருத்தை வெளியிட்ட அவர், புதிய அரசியலமைப்பின் மூலம் அதிகாரங்கள், மாகாண அதிகாரிகளுக்கு செல்வதால், தேசிய கொள்கையின் கீழ் உள்ள சிகிச்சை பணிகள் பாதிக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டெங்கு பாதிப்புக்கான கொள்கைகள் கூட இதனால் பாதிக்கப்படும் என்று ஹரித்த அலுத்கே சுட்டிக்காட்டியுள்ளார். ஏற்கனவே இலங்கையில் ஒழிக்கப்பட்டுள்ள போலியோ, மலேரியா போன்ற நோய்களும் மீண்டும் பரவக்கூடும் என்றும் அலுத்கே எச்சரித்துள்ளார்.

Related posts: