பிரித்தானியாவில் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பிலிருந்து நீக்க கோரி முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு நிராகரிப்பு!
Sunday, June 23rd, 2024
பிரித்தானியாவில் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான மேன்முறையீட்டு ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட இந்த மேன்முறையீட்டினை அந்த ஆணைக்குழு ஏகமனதாக நிராகரித்துள்ளது.
இந்த மேன்முறையீடு தொடர்பில் மனுதாரர்கள் தரப்பினர்களிடம் விரிவான சாட்சிய விசாரணைகளை, கடந்த மார்ச் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் குறித்த ஆணைக்குழு முன்னெடுத்திருந்தது.
இந்தநிலையில் அந்த மேன்முறையீடு தொடர்பான தீர்ப்பு கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டதுடன், இந்த முடிவு பிரித்தானிய நீதிமன்றத்திற்கும் அறியப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
எல்லை நிர்ணய அறிக்கை 27ஆம் திகதி வெளியிடப்பட உள்ளது!
வெப்பமான காலநிலை தொடர்பில் எச்சரிக்கை-வளிமண்டலவியல் திணைக்களம்!
காங்கேசன்துறை மற்றும் மன்னார் கடற்பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 27 இந்திய மீனவர்கள...
|
|
|


