பிணை முறி : ஆணைக்குழுவின் சாட்சிப் பதிவுகள் நிறைவு!
Wednesday, October 18th, 2017
சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சிப் பதிவுகள் நிறைவடைந்துள்ளது.
எனினும் தேவை ஏற்படின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசாரணைகளுக்காக அழைக்கப்படுவார் எனவும் குறித்த ஆணைக்குழுவின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மரண அச்சுறுத்தல் காரணமாக அனிகா நாட்டை விட்டு வெளியேறினார்.
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குத்தகைக்குப் பெற்ற சொகுசு வீட்டின் உரிமையாளரான அனிகா விஜேசூரிய நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
ரவி கருணாநாயக்க தங்கியிருந்த வீட்டிற்கான குத்தகைப் பணத்தை அர்ஜூன் அலோசியஸ் வழங்கியதாக அனிகா விஜேசூரிய சாட்சியமளித்திருந்தார்.
இந்நிலையில் மரண அச்சுறுத்தல் காரணமாக அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பிணை முறிகள் தொடர்பில் விசாரிக்கும் ஆணைக்குழு தகவல்கள் தெரிவித்துள்ளது
Related posts:
|
|