பாரதப் பிரதமரின் வருகையினை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள்!

Saturday, June 8th, 2019

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையினை முன்னிட்டு கொழும்பை அண்மித்த வீதிகளில் போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாளை 09ம் திகதி முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரையான காலப்பகுதியில் கட்டுநாயக்க ௲ கொழும்பு அதிவேக பாதை, பேலியொகொடை மேம்பாலம், பொரளை ஊடாக கனத்தை சுற்றுவட்டம் வரையும், பொரளை டி.எஸ் சேனநாயாகக்க சந்தி முதல் காலி வீதி வரையும் இந்த விஷேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன்காரணமாக குறித்த காலப்பகுதியினுள் விமான நிலையங்களுக்கு பயணிப்பவர்கள் அது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts:

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் கடத்தலை தடுக்க விசேட நடவடிக்கை - கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் கைது ...
செத்தல் மிளகாய் உற்பத்தியை 25 சதத்தினால் அதிகரிக்க நடவடிக்கை - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப...
போலியான குறுஞ் செய்திகள் குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு பொதுமக...