பாணின் விலையை 3 ரூபாவால் அதிகரிக்க யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் மகேசன் அனுமதி – இன்றுமுதல் நடைமுறை!

Friday, May 1st, 2020

யாழ் மாவட்டத்தில் 450 கிராம் எடைகொண்ட பாண் ஒன்றின் விலையை 3 ரூபாயால் அதிகரிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கோதுமை மாவுக்கு பிறிமா நிறுவனத்தால் வழங்கப்பட்ட 3 ரூபாய் விலைக்கழிவு இடைநிறுத்தகப்பட்ட நிலையில் இந்த அனுமதியை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் மகேசன் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து யாழ் மாவட்டத்தில் 450 கிராம் எடைகொண்ட பாண் ஒன்றின் விலை 63 ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் மாவின் விலை அதிகரித்தமையாலும் பாண் உற்பத்திக்கான உப மூலப்பொருள்களின் விலை சடுதியாக அதிகரித்தமையாலும் யாழ்ப்பாணத்தில் பாணின் விலையை அதிகரிக்க அனுமதியளிக்கவேண்டும் என யாழ்.மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம், யாழ். மாவட்டச் செயலாளரிடம் கோரியிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 450 கிராம் எடைகொண்ட பாண் ஒன்றின் விலை 3 ரூபாயால் அதிகரிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: