பாடசாலை விடுமுறையை முன்னிட்டு விஷேட புகையிரத சேவை!
Saturday, December 8th, 2018பாடசாலை விடுமுறை காலத்தில் மாணவர்கள் உள்ளிட்ட சுற்றுலா பயணிகள் மலையக பகுதிகளுக்கு சுற்றுலா செல்லக் கூடும் என்ற நோக்கில் விஷேட புகையிரத சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த விடுமுறை காலத்தை முன்னிட்டு மலைநாட்டுக்கான புகையிரத மார்க்கத்தில் விஷேட புகையிரதம் ஒன்று சேவையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த புகையிரதம் நாளாந்தம் காலை 7.30 அளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து பதுளை வரை பயணித்து மறுநாள் முற்பகல் 9.30 அளவில் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையவுள்ளதாக கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
Related posts:
சுற்றறிக்கையை மீறி நிதி சேகரிக்கும் அதிபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - கல்வி அமைச்சு!
அரச ஊடகங்களுக்குப் புதிய தலைவர்கள்!
அரசாங்கமும் ஜனாதிபதியும் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு முழுமையான ஆதரவு - முன்னாள் ஜனாத...
|
|