பாடசாலை மாணவர்கள் தொடர்பில் ஜனாதிபதியின் முக்கிய செய்தி!
Wednesday, October 25th, 2017
2019ஆம் ஆண்டில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பொருளாதார நெருக்கடிமிக்க மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
புலமைப்பரிசிலுக்குரிய மாணவர்களை தெரிவு செய்வதற்காக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.ஒரு கல்வி வலயத்திற்கு 100 மாணவர்கள் வீதம் இந்தப் புலமைப் பரிசிலை வழங்க கல்வி அமைச்சு எதிர்பார்த்துள்ளது. புலமைப்பரிசில் பெறும் மாணவர்களுக்கு 24 மாதங்களுக்காக 500 ரூபா வீதம் மாதாந்தம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.இலங்கை வங்கியுடன் இணைந்து கல்வி அமைச்சு இந்தச் செயற்திட்டத்தை முன்னெடுக்க உள்ளது
Related posts:
தனியார்துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை அதிகரிக்க தொழிலாளர் ஆணையாளர் தலைமையில் குழு - அமைச்சர் நிமல் ச...
எந்த அளவுக்கு அழிவை ஏற்படுத்த முடியும் என்பதை, இந்தியாவில் கொரோனா 2-வது அலை காட்டுகிறது - உலக சுகாதா...
பொது போக்குவரத்து சேவையை வலுப்படுத்த 8 மாற்றங்கள் – துறைசார் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!
|
|