பாடசாலை மாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டம் எதிர்வரும் ஜனவரி முதல்!

Friday, November 16th, 2018

2020 ஆம் ஆண்டில் இலங்கையை பால் உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்வதற்காக கிராம சக்தி மக்கள் இயக்கத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கமைய பாடசாலை மாணவர்களுக்கு பால் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஜனாதிபதி செயலணிகளின் நடவடிக்கைகள் மற்றும் விசேட நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடலின் போது சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

Related posts: