பாடகர்களுக்கு ஓய்வூதியம்!
Friday, September 8th, 2017ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், 65 வயதுக்கும் மேற்பட்ட சிரேஷ்ட பாடகர், பாடகிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு, ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.இதனை இலங்கை பாடகர், பாடகிகள் சங்கம் ஒழுங்கு செய்திருந்ததுடன், குறித்த நிகழ்வில் 40 பாடகர், பாடகிகளுக்கு காசோலைகளையும் சான்றிதழ்களையும் ஜனாதிபதி வழங்கியுள்ளார்.
ஜனாதிபதியின் வழிக்காட்டலின் பேரில் கலைஞர்களுக்கு பல நலன்புரி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை, பாடகர், பாடகிகளின் பாதுகாப்பு நிதியத்திற்கு ஜனாதிபதி அண்மையில், 250 லட்சம் ரூபா வழங்கியதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
இடைக்கால நிர்வாக சபையை கோரியுள்ள அமைச்சர் அர்ஜூன!
பூகொடை நீதிமன்ற கட்டிடத்திற்கு அருகில் வெடிப்பு சம்பவம்!
தரிசு நிலத்தில் அல்லது கைவிடப்பட்ட நிலத்தில் அரச காணிகள் உள்ளடங்களாக 1500 ஏக்கரில் விவசாயம் - களமிற...
|
|