பரீட்சைக்கு முன்பதாகவே வெளியாகும் விடயங்கள் – முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா!

Thursday, July 19th, 2018

வினாத்தாளில் உள்ள விடயங்கள் பரீட்சைக்கு முன்னரே வெளியிடப்படுவதாக முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் பரீட்சை வினாத்தாள்களைத் தயாரிக்கும் சிலருக்குத் தனியார் வகுப்பு ஆசிரியர்களுடன் இருக்கும் தொடர்பே இதற்குப் பிரதான காரணம்.

உயர்தரப் பரீட்சையில் சிறப்பு சித்தி பெற்ற மாணவர்களின் கல்வி அறிவு மிகவும் கீழ் மட்டத்தில் இருப்பதாகப் பல்கலைக்கழகங்களின் ஊடாகத் தெரிய வந்துள்ளது. என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிட்டம்புவ பொது நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

Related posts: