பதிவாளர் நாயகம் விடுத்துள்ள விசேட அறிக்கை!

Tuesday, March 31st, 2020

நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையால் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலைமையில் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான பத்திரங்களை பதிவு செய்ய பதிவாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பதிவாளர் திணைக்கள பதிவாளர் நாயகம் என்.சி. திரு. விதானகே அறிக்கை ஒன்றை விடுத்து இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அதற்கமைய பல்வேறு தொலைப்பேசி இலக்கங்களையும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். என்.சி விதானகே, பதிவாளர் நாயகம் – 0701 588 433

புபுதிகா எஸ்.பண்டார சிரேஸ்ட பிரதி பதிவாளர் நாயகம் (நிர்வாகம்) – 0713 483 238

சி.எஸ்.ஜாகொட ஆராச்சி உதவி பதிவாளர் நாயகம் – 0714 485 564

சமன் திசாநாயக்க உதவி பதிவாளர் நாயகம் – 0703 899 535

அதற்கமைய 1951 ஆம் ஆண்டு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டத்தின்படி பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடமிருந்து மூன்று மாதங்களுக்குள் அவற்றை பெற முடியும் அல்லது பிறப்பு, இறப்பு பதிவான பிரதேச செயலகத்தில் அவற்றை பதிவு செய்துக்கொள்ள முடியும்.

ஆனப்படியால் பிறப்புகளைப் பதிவு செய்துக்கொள்ள தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்க வேண்டாம் எனவும் அவர் பொது மக்களை கேட்டுள்ளார்.

இறப்பு தொடர்பான பதிவு நடவடிக்கைகள் இறந்தவரின் இறுதி சடங்கிற்கு முன்னதாக பெற்று கொடுக்குமாறு அனைத்து உள்ளுராட்சி சபை அதிகாரிகளுக்கும் ஏற்கனவே சுற்றறிக்கைகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

01. பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரால் வழங்கப்பட்ட அறிக்கை – (படிவம் எண்: பீ 16)

02. நீதவான் நீதிமன்றம் ஃ திடீர் மரண விசாரணையாளர் வழங்கும் சான்றிதழ்கள் – (படிவம் எண்: பீ 18)

03. மருத்துவமனை இறப்பு சான்றிதழ் – (படிவம் எண்: பீ 33)

Related posts: