பண்டிகை காலத்தில் முடக்கல் சாத்தியமில்லை – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவிப்பு!

Wednesday, March 17th, 2021

எதிர்வரும் பண்டிகை காலத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக முடக்கலோ அல்லது குறைந்தளவான போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிப்பதோ சாத்தியமில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் இன்னொரு பரவலை தடுப்பதற்கு பொதுமக்கள் அவதானமாக எச்சரிக்கையுடன் பொறுப்புணர்வுடன் செயற்படுவதே முக்கியம் எனவும் பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோகண தெரிவித்துள்ளார்.

குறித்த நோய்த் தொற்றால் உலக பொருளாதாரமும் நாட்டின் பொருளாதாரமும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள உபுல்ரோகண இதன் காரணமாக முடக்கல் நிலையோ போக்குவரத்து கட்டுப்பாடுகளே சாத்தியமில்லை எனவும் தெரிவித்துள்ளார். அதேநேரம் நாட்டின் அந்நிய செலவாணிக்கு பங்களிப்பு செய்த புலம்பெயர் தொழிலாளாகள் தங்கள் தொழிலை இழந்து நாடு திரும்பிக்கொண்டிருக்கின்றனர் என அவர் இதன்போது சுட்டிக்காட்டியிரந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: