பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பலத்த பாதுகாப்பு!

வடக்கு மாகாணத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் றொசான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தமிழ் சிங்கள புதுவருடப்பிறப்பை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் வியாபாரங்கள் அமோகமாக நடைபெறுவதால் பொதுமக்கள் அதிகளவில் போக்குவரத்தில் ஈடுபடுவார்கள் என்றுதெரிவிக்கப்படுகிறது.
இதனால் நெரிசல் அதிகரிப்பதனால் திருடர்களின் நடமாட்டமும் அதிகரிக்கும் எனவும், இதனாலேயே பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர்தெரிவித்துள்ளார்.
மக்கள் பொருட்களை வாங்க நெரிசலாக ஈடுபடும் நகர்ப்புறங்களில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கை கடற்படையினர் அதிரடி நடவடிக்கை – சட்டவிரோத இந்திய மீன்பிடியாளர்கள் 23 பேர் கைது!
இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார் - இறுதி திகதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெர...
கீரிமலை ஜனாதிபதி மாளிகையை நீண்டகால குத்தகை என்ற பெயரில் ஒப்படைக்க கூடாது - அகில இலங்கை இந்து மா மன்ற...
|
|