பணியாளர்கள் நாடுகளுக்கு திரும்புவதற்கு 6 மாத கால பொதுமன்னிப்பு!

ஜோர்தான் நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள பணியாளர்கள் சொந்த நாடுகளிற்குத் திரும்புவதற்காக பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி வரை 6 மாதங்கள் அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
ஜோர்தானில் 3,500 இலங்கையர்கள் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளதாக, அந்நாட்டின் தூதுவராலயம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் குடிவரவு குடியகல்வு சட்டத்தின்படி, ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின் பொது மன்னிப்பு காலத்தினுள் அவற்றை தீர்த்து பணியாளர்களை நாட்டிற்கு அனுப்பிவைப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
வெளிநாட்டு தொழிலாழர்களுக்கு சலுகை அதிகரிப்பு!
ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது தேர்வாவது எப்படி?
மூடப்பட்டது இலங்கையின் மத்திய அஞ்சல் பரிவர்த்தனை மையம்!
|
|