பணிகளில் இருந்து தற்காலிக இடைநீக்கம்!
Friday, November 25th, 2016அகில இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் செயலாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து அஞ்சன பிரியஞ்சித்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சங்கத்தின் தலைவர் ஸ்டேன்லி பெனேன்டோ வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில், சங்கத்தின் நிறைவேற்று சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் சங்கத்தின் தீர்மானங்களுக்கு புறம்பாக செயற்பட்டமை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
நீர்கொழும்பில் கட்டடம் இடிந்து வீழ்ந்ததால் பதற்றம்!
பொதுத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள முக்கிய செய்தி!
பணிப்பெண் பாலியல் துஷ்பிரயோகம்: ரிஷாட்டின் மைத்துனர் கைது!
|
|