பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து – இருவர் படுகாயம்!
Tuesday, March 19th, 2019கட்டான – கிம்புலபிட்டி பகுதியில் அமைந்துள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் நேற்று மாலை ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தீவிபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
மீண்டும் தாக்குதல் நடக்கலாம் - அமெரிக்காவின் எச்சரிக்கை!
கல்வியியல் கல்லூரி டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் - கல்வி அமைச்சு!
கொரோனா தொற்றாளிகள் சமூகத்திலிருந்து பதிவாகாமையை கருத்திற் கொண்டு நாடு மீளத் திறக்கப்படுகின்றது - சு...
|
|