பட்டாசு கொளுத்த அனுமதி பெற வேண்டும் – பாதுகாப்பு அமைச்சு !
Wednesday, April 10th, 2019அனுமதிப்பத்திரமின்றி பட்டாசு உற்பத்தியில் ஈடுபடும் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் மாவட்ட செயலாளர்களின் மூலம் ஆராயப்பட்டு வருதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளதோடு, இவ்வாறான வர்த்தகர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அந்தவகையில், 011 2335792 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக இவர்கள் தொடர்பில் அறிவிக்கலாம் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
மரண தண்டனை - இரத்து செய்வதற்கான தீர்மானம் கொண்டுவரின் அது தேசிய துக்க தினம்!
உலக நாடுகள் பலவற்றில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் - மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றத் தவ...
பூஸ்டர் தடுப்பூசியின் செயற்றிறன் எதிர்பார்க்கும் மட்டத்தை அடையும் பட்சத்தில், முகக்கவசம் அணிவதை தவிர...
|
|