நோயாளிகளுக்கு நன்மையான சட்டங்கள்!
Friday, April 22nd, 2016
தனியார் மருத்துவமனைகளின் சேவைக் கட்டணங்களுக்கான வற்வரி அதிகரிக்கப்படும் அதேவேளை வைத்தியப் பரிசோதனைகளுக்கான (சனலிங்) கட்டணம் 2000 ரூபாவாக வரையறுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அதனை மீறி அதிகட்டணம் அறவிட்டால் அத்தனியார் வைத்தியசாலை கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோது அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சத்திர சிகிச்சை நிபுணர்கள் நோயாளி ஒருவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொண்ட பின்னர் நோயாளியின் அருகில் ஒரு மணித்தியாலம் இருக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். இதேபோன்று நோயாளிகளுக்கு நன்மையான விதத்தில் பல சட்டங்கள் கொண்டுவரப்படவுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
Related posts:
வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கைக்கு வரவேற்பு!
மக்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் தெரியாமல் எந்தவொரு உடன்படிக்கையும் செய்யப்படமாட்டாது - பிரதமர் மஹ...
அம்பாறை மாவட்டத்தில் சேதனப் பசளை உற்பத்தி பயிற்சி - கமநல சேவைகள் உதவி ஆணையாளர் சம்பா தென்னக்கோன் தெர...
|
|
|


