நெல் மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி! 

Tuesday, March 13th, 2018

பெரும் போக விவசாய செய்கை மூலம் மரக்கறி மற்றும் நெல் அறுவடைகள் சந்தைக்கு வருவதால் எதிர்வரும் மாதங்களில் இவற்றின் விலை குறைவடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அறுவடையின் மூலம் எதிர்வரும் 7 மாதங்களுக்குத் தேவையான நெல் கிடைக்கப்பெற்றுள்ளதாக விவசாய ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தமுறை பெரும் போகத்தில் 23 இலட்சம் மெற்றிக் தொன் அறுவடை எதிர்பார்க்கப்பட்டது. இதனால் எதிர்வரும் தினங்களில் திறந்த சந்தையில் ஒரு கிலோ சம்பா அரிசி 80 ரூபா வரை விலை குறைவடையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் தம்புத்தேகம புத்தளம் ஆகிய பகுதிகளில் இருந்து அதிகளவில் மரக்கறி உற்பத்தி செய்யப்பட்டு சந்தைகளுக்கு அனுப்பப்படுகிறது. இதனால் எதிர்காலத்தில்மரக்கறியின் விலையிலும் வீழ்ச்சி ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உருளைக் கிழங்கு பெரிய வெங்காயம் சிறிய வெங்காயம் ஆகியவற்றின் விலைகள் 80 ரூபாவில் இருந்து 120 ரூபாவிற்கு இடைப்பட்ட மட்டத்தில் இருக்கும் எனவும்எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related posts: