நீரை சுத்திகரிப்பதற்கான இரசாயன பொருட்களுக்கு தட்டுப்பாடில்லை – சமூக ஊடக செய்திகளுக்கு சபை மறுப்பு!
Saturday, May 28th, 2022
நீர் சுத்திகரிப்பு செய்யும் இரசாயனப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக குழாய்நீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல என சமூக ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நீர் சுத்திகரிப்பதற்கு தேவையான இரசாயனப் பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை என்றும் சுத்திகரிக்கப்பட்ட நீரே வழங்கப்படுவதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
000
Related posts:
உயர்தரப் பரீட்சைக்கு 315605 மாணவர்கள் தோற்றவுள்ளனர்!
சீரற்ற வானிலையால் எரிவாயு தரையிறக்கும் பணிகள் இடைநிறுத்தம் - மறு அறிவிப்பு வரை காத்திருக்குமாறு பொது...
பாடசாலைக்கான 2 ஆம் தவணை இன்றுடன் நிறைவு - 3ஆம் தவணை எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பம்!
|
|
|


