“நீரைக்காட்டிலும் அடர்த்தி மிக்கது” இலங்கையின் உறவு குறித்து இந்தியாவின் நிலைப்பாடு – இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவிப்பு!

Saturday, March 18th, 2023

நீரை காட்டிலும் இரத்தம் அடர்த்தி மிக்கது. இது போன்றே இலங்கையும் இந்தியாவின் உறவு உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

எனவே இக்கட்டான நிலையிலும் இந்தியா இலங்கையுடன் இணைந்து செயற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் கீழ் இந்தியா செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

புதுடில்லியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர் இந்தக் கருத்துக்களை அவர் வெளியிட்டார்.

இதேவேளை கடினமான தருணங்களை கடந்து வரும்போது இலங்கையின் உண்மையான நண்பர் யார் என்பதே முக்கியம் என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுபணத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செலுத்தியது!
பல்கலை அனுமதிக்கான விண்ணப்பங்கள் ஏற்கும் காலம் நாளையுடன் நிறைவு - வாக்காளர் பதிவேடு குறித்த விபரங்கள...
பாடசாலை பாடப்புத்தகங்கள் அச்சிட இந்தியாவிலிருந்து நிதி - சீனாவிலிருந்து சீருடை- கல்வி அமைச்சர் சுசில...