நாளைமுதல் யாழ் மாவட்டத்தில் 5000 ரூபா இடர்காலக் கொடுப்பனவு வழங்க ஏற்பாடு – தடுப்பூசியை பெற்றுக்கொள்வதிலும் மக்கள் அதிக ஆர்வம் – மாவட்ட செயலகம் அறிவிப்பு!

Tuesday, June 1st, 2021

இடர் கால நிதியுதவியான 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு நாளைமுதல் யாழ் மாவட்டதில் வழங்கப்பட உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க செயலகம் அறிவித்துள்ளது.

இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போதே இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் யாழ்  மாவட்டத்தில் சுமார் 75, ஆயிரம் குடும்பங்களுக்கு அதாவது சமுர்த்தி பெற்று வருகின்ற குடும்பங்களுக்கும். அத்தோடு வருமானம் குறைந்த 38 ஆயிரம் குடும்பங்கள் உட்பட மொத்தமாக ஒரு இலட்சத்து 52 ஆயிரம் குடும்பங்களுக்கு இந்த 5000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.

நாளையதினம் அந்தந்த பிரிவில் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. எனினும் தற்போது பயணத் தடை அமுலில் உள்ளதான் காரணமாக கடந்த காலங்களைப் போன்று சிலவேளைகளில் அந்தந்த பகுதி அரச உத்தியோகத்தர்களினால்  வீடுகளுக்குச் சென்று அந்தக் கொடுப்பினை வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்படுகின்றது.

அத்தோடு யாழ் மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலைமையானது அதிகரித்த நிலையிலேயே காணப்படுகின்றது

நேற்று கிடைத்த  பி.சி ஆர் முடிவுகளின் படி 102 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதேவேளையில் அன்டியன்  பரிசோதனையிலும் நேற்றையதினம் மொத்தமாக 45 பேருக்கு தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் யாழ் மாவட்டத்தில் இன்றுவரையான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 144 ஆக அதிகரித்துள்ளது அதேவேளையில் நேற்று மூன்றுஇறப்புகள் யாழ் மாவட்டத்தில் பதிவாகியுள்ளன . அந்த வகையில் இறந்தவர்கள் எண்ணிக்கை 43 ஆக தற்போது அதிகரித்துள்ளது

இந்நிலையில் சுமார் 3 ஆயிரத்து 298 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 626 நபர்கள் தனிமைப்படுத்தலுக்கு ட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

ஏற்கனவே  யாழ் மாவட்டத்தில் நான்கு கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டிருந்தன அதிலே தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பலாலி வடக்கு அன்ரனி புரம்  கிராமம் இன்று காலையில் இருந்து தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது

ஏனைய தனிமைப்படுத்தப்பட்ட 3 கிராமங்களும் கட்டங்கட்டமாக சுகாதார பிரிவினரின்  அறிவுறுத்தலுக்கு அமைய விடுவிக்கப்படும்.

மேலும் யாழ் மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கல் செயற்பாடானது கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுவருகின்றது. அத்துடன் மிக வேகமாக பொதுமக்களுக்கான இந்த தடுப்பூசிகளை வழங்க வேண்டிய தேவையுள்ளது.

எனினும் ஆரம்பத்தில் மக்கள் ஆர்வம் இல்லாது அதனை பெற்றுக் கொள்வதற்கு முன்வராத நிலை காணப்பட்டது எனினும் நேற்றயைதினம் மற்றும் இன்றையதினம் பொதுமக்கள் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றார்கள் அத்தோடு இன்று வரை 9  ஆயிரம் பேர் தடுப்பூசியினை பெற்றிருக்கின்றார்கள்

இன்றையதினமும் தடுப்பூசி வழங்கல் மிக வேகமாகச் செயற்படுத்தப்படுகிறது இன்றைய தினம்  17 நிலையங்களில் தடுப்பூசி வழங்கல் இடம்பெறுகிறது  29 கிராம சேவகர் பிரிவுகளிற்கு இந்த தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

14 பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 87 கிராமங்களுக்கு முதற்கட்டமான இந்த தடுப்பூசி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது..

அத்துடன் தடுப்பூசி நிலையங்களில் பெருமளவில் மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசியினை பெறுவதை  காணக்கூடியதாகவுள்ளது.

அதேவேளை ஒரு சில இடங்களில் அவ்வாறு மந்தமான நிலை காணப்பட்டபோதிலும் தற்போது மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி பெற்றுக் கொள்வதை காணக்கூடியதாகவுள்ளது.

எனவே பொதுமக்கள்  தடுப்பூசியினை எந்தவித தயக்கமுமின்றி பெற்றுக் கொள்வதன் மூலம் தமக்கென ஒதுக்கப்பட்டுள்ள கிராம அலுவலர் பிரிவில் தடுப்பூசி வழங்கும் நிலையத்துக்குச் சென்று உரிய நேரத்தில் தமக்குரிய தடுப்பு ஊசியை பெற்றுக்கொள்ள முடியும்.

அதோடு தற்போது பயணத் தடை அமுலில் உள்ள நிலையில் பொதுமக்கள் தடுப்பூசியினை பெற செல்வதற்கு எந்தத் தடையுமில்லை என்றும் தமக்கு அண்மையில் உள்ள தடுப்பூசி நிலையங்களுக்குச் சென்று தமக்குரிய தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளமுடியும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: