நாளைமுதல் பாடசாலைகளுக்கு நீண்டகால விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Thursday, December 21st, 2023

அரசு மற்றும் அரசு சார் பாடசாலைகளுக்கு நாளை வெள்ளிக்கிழமை 22ஆம் திகதிமுதல் எதிர்வரும் பெப்ரவரி 01 ஆம் திகதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

அனைத்து அரச மற்றும் அரசு சார் பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் தவணையின் முதல்கட்ட கற்றல் செயல்பாடுகள் நாளையுடன் முடிவடைவதால் பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி 01 ஆம் திகதி ஆரம்பமாகி பெப்ரவரி 19ஆம் திகதிவரை இடம்பெறும்.

பெப்ரவரி 19ஆம் திகதிமுதல் புதிய தவணை ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: