நான்கு மணிநேர சுற்றிவளைப்பினால் பெருமளவு போதைப்பொருட்கள் கைப்பற்றல்!

Thursday, February 1st, 2018

நாட்டின் அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனைகள் மூலம் பெருமளவு போதைப்பொருட்கள்கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு(31) 11 மணி முதல் இன்று(01) அதிகாலை 3 மணி வரையில் 1300 இற்கு மேற்பட்ட வீதிச் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 21000 வாகனங்களையும்42000ற்கும் அதிக நபர்களையும் சோதனையிட்டதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இதன்போது சுமார் 14g ஹெரோயினும் 11kg ற்கு மேற்பட்ட கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதுடன் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 3860 லீற்றர் மதுபானமும் மீட்கப்பட்டதாககுறிப்பிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாகச் சந்தேகிக்கப்படும் 3700 இற்கு மேற்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் பல்வேறுகுற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 554 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: