நாட்டை வீழ்த்துவதே போராட்டக்காரர்களின் பிரதான நோக்கம் – வீடுகளை எரித்தவர்கள் நாடாளுமன்றுக்கு வருகைத் தந்து கொண்டிருக்கிறார்கள் – நாமல் ராஜபக்ஷ கற்றச்சாட்டு!

Tuesday, August 1st, 2023

போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்களின் பிரதான நோக்கமாக நாட்டை வீழ்த்திவிட வேண்டும் என்பதுதான் இருந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்களின் பிரதான நோக்கமாக நாட்டை வீழ்த்திவிட வேண்டும் என்பதுதான் இருந்ததே ஒழிய, நாட்டை முன்னேற்றுவது அல்ல.

நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பில் மாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டும் என்று உண்மையாக போராட்டம் நடத்திய தரப்பினரைக்கூட, சில அரசியல் கட்சிகள் திசை திருப்பின.

அன்று எமது வீடுகளை எரித்தார்கள். வீடுகளை எரித்தவர்களுக்கு வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் செய்யக்கூட முடியாமல் உள்ளது.

ஏனெனில், அவர்கள் மீது பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு திட்டமிட்ட தரப்பினர் இன்னமும் நாடாளுமன்றுக்கு வருகைத் தந்துக் கொண்டிருக்கிறார்கள்.

குறைந்தது, அவர்களிடம் வாக்குமூலம்கூட பெறப்படவில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: