நாட்டில் கடந்த 10 நாட்களில் ஆயிரத்து 800 இற்கும் அதிகமான மரணங்களும் பதிவு!
Wednesday, August 25th, 2021இலங்கையில் கடந்த 10 நாட்களில் மாத்திரம் பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை ஆயிரத்து 800 ஐ கடந்துள்ளது.
இறுதியாக பதிவான 190 கொவிட் மரணங்களுடன், நாட்டில் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 750 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கமைய, கடந்த 10 நாட்களில், ஆயிரத்து 815 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. இதில் 60 வயதிற்கு மேற்பட்ட ஆயிரத்து 399 பேரின் மரணங்கள் பதிவான நிலையில், இந்த எண்ணிக்கை 77 சதவீதமாக காணப்படுகிறது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தரவுகளின் அடிப்படையில், இலங்கையில் கொவிட் மரணங்களின் சதவீதமானது, 1.94 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரசாங்க சுற்று நிருபங்கள் மக்கள் சேவைகள் தாமதமாவதற்கு காரணமாகக்கூடாது - ஜனாதிபதி
வெள்ளை சீனிக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகூடிய உச்ச விலை தொடர்பான வர்த்தமானி இரத்து!
உக்ரைனில் நடத்தும் ராணுவ உயிரியல் ஆய்வக செயல்பாடுகள் குறித்த தகவலை உடனடியாக வெளியிட வேண்டும் - அமெர...
|
|