நாட்டிலுள்ள சிறுநீரக நோயாளர்களது தொகை மதிப்பீடு!

Saturday, January 6th, 2018

சிறுநீரக நோயாளர்களது எண்ணிக்கையை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ள சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த வருடத்தில் தொகை மதிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்குத் தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டிருப்பதாக தேசிய சிறுநீரக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் டொக்டர் ரத்னசிறி ஹேவகே தெரிவித்துள்ளார்.

மேலும் சிறுநீரக நோயாளர்களுக்கான சேவைகளை இந்தத் தொகை மதிப்பின் மூலம் விரிவாக மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: