நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
Saturday, April 23rd, 2022நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மத்திய, மேல், சப்ரகமுவ, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏனைய பாகங்களின் சில இடங்களில், 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
எனவே, காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வடமாகாணத்தின் மூன்று மாவட்டங்களின் சில பிரதேசங்களில் இன்று மின்தடை
புற்றுநோய் சிகிச்சைக்காக பல மில்லியன் ரூபாவில் கொள்வனவு செய்யப்பட்டும் பயன்படாத இயந்திரம் - தெல்லிப்...
கிடைத்த வரங்களை சாபங்களாக்குவதில் கடந்த காலத்தை தொலைத்துவிட்டது எமது இனம் - ஈ.பி.டி.பியின் கிளிநொச்...
|
|