நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மத்திய, மேல், சப்ரகமுவ, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏனைய பாகங்களின் சில இடங்களில், 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
எனவே, காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
விலை நிர்ணயிக்கப்பட்ட 10 பொருட்களில் விலையை மேலும் 5 ரூபாவால் உயர்த்த முடியும்?
நல்லூர் பகுதி சைவ உணவகத்தில் ஒரு கோப்பை பால் தேநீர் 200 ரூபா - மக்கள் குற்றச்சாட்டு!
முகாமைத்துவ பயிலுனர்களுக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது இலங்கை மத்திய வங்கி!
|
|