நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியாது – எதிர்க்கட்சிக்கு ஜனாதிபதி அறிவிப்பு!

Friday, May 1st, 2020

கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதிபடத் தெரிவித்துள்ளார் என எதிர்கட்சியின் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கையொப்பத்துடன் கடந்த 26 ஆம் திகதி தனக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த ஒன்றிணைந்த அறிக்கைக்கு ஜனாதிபதி பதிலளித்துள்ளார்.

அத்துடன் கொவிட் 19 வைரஸை கட்டுப்படுத்தி இயல்பு வாழ்க்கையை பாதுகாப்பதற்கு முழு அரச இயந்திரமும் அர்ப்பணிப்புடன் உள்ள சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சி குறுகிய அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தர அவர்களின் கையொப்பத்துடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் பேரில் செயலாளர் அவர்களினால் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையின் படி தெரியவருவதாவது, அறிக்கையில் கையொப்பமிட்டுள்ள தரப்பினர் தேர்தல் நடத்துவது தேவையில்லை என்றும், கொவிட் 19 வைரஸ் தொற்றுடன் மக்களின் சுகாதார, சமூக பாதுகாப்பு, நலன் பேணலுக்கு முழு அரச இயந்திரமும் அதிக பட்சம் கவனம் செலுத்தியுள்ள இச்சந்தர்ப்பத்தில் குறுகிய அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும், கொவிட் 19 நோய் நிவாரணத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சுகாதார, ஏனைய அரச சேவைகள், முப்படையினர், பொலிஸ் மற்றும் தனியார் துறையினரின் பெரும் தியாகசிந்தையுடனான பணிகளை மதிக்காமையுமாகும் என்று மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் பேரில் அறியத்தர விரும்புகின்றேன்.

அத்துடன் நாடாளுமன்றம் கலைக்கப்படுவது அதன் 5 வருட கால நிறைவில் அல்லது ஜனாதிபதி அவர்களினால் கலைக்கப்படும் சந்தர்ப்பத்திலாகும் என்றும், அந்த வகையில் 2020 மார்ச் மாதம் 02ஆம் திகதி மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் நாடாளுமன்றத்தை கலைத்துள்ளதாகவும் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு கலைக்கப்பட்டமை நீங்கள் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் கையொப்பமிட்டுள்ள அனைத்து தரப்பினரினதும் ஏற்புடனும் மேற்படி நாடாளுமன்ற கலைப்பு பற்றிய அறிவித்தலின் செல்லுபடியாகும் தன்மை உறுதியாவதாகவும் அறிவிக்குமாறு ஜனாதிபதி அவர்கள் எனக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியாது என்றும், 2020.03.02 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்ட நாடாளுமன்றத்தை கலைக்கும் அறிவித்தலின்படி 2020.04.25 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், அதன் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் 2020.06.20ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்குமாறு எனக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது

மேலும், அரசியலமைப்பின் 70(7) படி செயற்படுவதற்கான தேவை எழவில்லை என்றும் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் உங்களுக்கு அறிவிக்குமாறு எனக்கு பணிப்புரை வழங்கியுள்ளார் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: