நல்லூர் செம்மணி வளைவிற்கு அண்மையாக ஏ9 வீதியில் விபத்து – கணவன் உயிரிழப்பு – மனைவி படுகாயம்!

Saturday, August 19th, 2023

யாழ்ப்பாணம், ஏ9 வீதியில் இன்று மதியம் மோட்டார் சைக்கிளும், பொலிசாரின் தண்ணீர் பவுசரும் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் உயிரிழந்ததுடன் மனைவி படுகாயமடைந்துள்ளார்.

நல்லூர் செம்மணி வளைவிற்கு அண்மையாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்தபோது, பொலிசாரின் தண்ணீர் பவுசருடன் மோதி விபத்துக்குள்ளாகினர்.

இதில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவத்தில் 31 வயதுடைய புவனேஸ்வரன் மனோஜ் என்ற கொக்குவில் கிழக்கை சேர்ந்த இளைஞரே உயிரிழந்தார்.

மன்னாரை சேர்ந்த 26 வயதான மனைவி உயிராபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

சாவால்களை வெற்றிகொள்ளும் நம்பிக்கையுடன் வெளிக்கிழமை ஜெனிவா செல்கிறது அமைச்சர் பீரிஸ் தலைமையிலான இலங்...
புதிய வாக்காளர்களின் பெயர் பட்டியலின் அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் அதிக எம்.பிக்கள் - தேர்தல்க...
நாடளாவிய ரீதியில் மிக மோசமான நிலையில் சுமார் 30 பாலங்கள் –- அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டு!