நல்லாட்சி அரசின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: இந்தியப் பிரதமரிடம் அமைச்சர் ரவி கருணாநாயக்க!
Friday, June 9th, 2017கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நல்லாட்சி அரசாங்கம் நிறைவேற்றும் என இந்திய பிரதமரிடம் உறுதியாக தெரிவித்ததாக வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சரின் இந்திய விஜயத்தில் பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து விவாதிக்கப்பட்டதா என வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மேலும் தெரிவித்த அவர், “இலங்கையின் அரசியல் நிலைமைகள், புதிய அரசியலமைப்பு என்பன குறித்து இந்திய பிரதமர் கேட்டறிந்து கொண்டார். அதேபோன்று அரசியல் தீர்வு குறித்தும் கலந்துரையாடினார்.அதன்போது, கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு நல்லாட்சி அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாக இந்திய பிரதமரிடம் உறுதியாகக் குறிப்பிட்டேன். அதேவேளை, இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது” என்றார்.
Related posts:
|
|