நலன்புரி நிலையங்களில் வாழும் மக்களை வேறு இடங்களில் மீளக்குடியமர்த்தும் அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம்!

இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் மக்களை வேறு இடங்களில் மீளக்குடியமர்த்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைளுக்கு வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் அ.குணபாலசிங்கம் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இடம்பெயர்ந்த நிலையில் மீளக்குடியமர முடியாதிருக்கும் மக்களில் பெரும்பாலானோர் மயிலிட்டி மற்றும் அதனை அண்டிய 12 கிலோ மீற்றர் கரையோரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். குறித்த பிரதேசத்தை இராணுவமும், கடற்படையினரும் கையகப்படுத்தி வைத்துக்கொண்டு அவற்றை விடுவிக்க மறுத்து வருகின்றன. இந்தப் பிரதேசத்திலேயே இயற்கை மீன்பிடித்துறையான மயிலிட்டி மீன்பிடித் துறைமுகமும் அமைந்து காணப்படுகின்றது.
மயிலிட்டி மீன்பிடித்துறைமுகத்தை விடுவித்து அதனை அண்டிய கடற்கரைப் பிரதேசத்தைச் சுதந்திரமாகப் பயன்படுத்த மக்களுக்கு இடமளிக்காவிடில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்பார்க்கும் நல்லிணக்க இலக்கை அடைய முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|