நகர்ப்புறங்களில் விவசாயம் செய்யக்கூடிய பயன்பாட்டுக் காணிகளை அடையாளம் காணுமாறு துறைசார் அதிகாரிகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்பு!

Saturday, May 28th, 2022

உணவு நெருக்கடிக்கு தீர்வாக நகர்ப்புறங்களில் விவசாயம் செய்யக்கூடிய பயன்பாட்டுக் காணிகளை அடையாளம் காணுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டில் நிலவும் உணவுப் பற்றாக்குறை மற்றும் உணவு நெருக்கடி தொடர்பாக விவசாயத் துறை பிரதிநிதிகளை பிரதமர் சந்தித்து கலந்துரையாடினார்.

கலந்துரையாடலின் போது, விவசாய பொருட்களின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்வதற்காக அத்தியாவசிய விவசாய வழங்கல் சட்டம் என பெயரிடப்பட்ட புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

உக்ரேனில் நடைபெற்று வரும் யுத்தம் காரணமாக உலகம் கோதுமை மற்றும் உரப் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருவதாகவும் சுட்டிக்காட்டிய பிரதமர், தட்டுப்பாடு அதிகரிக்கும் போது உடனடி தீர்வு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இலங்கையின் உணவு விநியோகம் மோசமடையும் என்றும் விளக்கினார்.

நாடு ஆபத்தான நிலையில் உள்ளது என்றும் அதை மீட்க ஒருங்கிணைந்த முயற்சி தேவை என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: